இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம்

பிரச்சாரம்

கிள்ளியூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கலிங்கராஜபுரத்தில் இல்லம்தோறும் ஸ்டாலின் குரல் பிரச்சாரம் துவக்கம்.
கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட கொல்லங்கோடு நகர 33- வது திமுக கிளை சார்பாக 'இல்லம்தோறும் ஸ்டாலின் குரல்' என்ற திண்ணை பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கிளைச் செயலாளர் அப்துல் ரகுமான் தலைமை வகித்தார். கிள்ளியூர் தொகுதி தகவல் தொழில்நுட்ப பிரிவு ஒருங்கிணைப்பாளர் சுகன்யா, பூத் கமிட்டி பொறுப்பாளர் ஸ்ரீகுமாரி, சுனிதா, மணி, முத்தலிப், நூறுதீன், சிநேபி, ரவீந்திரன், அசோகன், முருகன், சந்தோஷ் குமார், அந்தோணி, சைமன் உட்பட கட்சியினர் கலந்து கொண்டு இந்த பிரச்சாரத்தில் ஈடுபட்டனர்.

Tags

Next Story