சிவகங்கையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு - டாக்டர் மீது வழக்கு பதிவு

சிவகங்கையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு - டாக்டர் மீது வழக்கு பதிவு

கைது செய்யப்பட்ட டாக்டர்


சிவகங்கையில் சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்த டாக்டர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம், சிவகங்கை காந்தி வீதியில் தனியார் கிளினிக் நடத்தி வருபவர் ஓய்வு பெற்ற அரசு பெண் டாக்டர் சுகுணா. இவரது கிளினிக்கில் 23 வயது பெண்ணிற்கு கருக்கலைப்பு செய்ததாக மருத்துவ இணை இயக்குனர் கமலதாசன் ஆய்வு செய்தார். கிளினிக்கில் உரிய அனுமதி இன்றி பெண்ணுக்கு கருக்கலைப்பு செய்ததாக சிவகங்கை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. எஸ்.ஐ., பிரபாகரன், ஓய்வு பெற்ற பெண் டாக்டர் சுகுணா மீது வழக்கு பதிவு செய்தார். பின் கிளினிக்கிற்கும் சீல் வைத்தனர்.

Tags

Next Story