தகாத உறவு - இரும்பு கம்பியால் அடித்து கொலை

தகாத உறவு - இரும்பு கம்பியால் அடித்து கொலை

தகாத உறவு - கொலை

சங்ககிரி: காதலனை மிளகாய் பொடி தூவி இரும்பு கம்பியால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சங்ககிரி அருகே உள்ள பக்காளியூர் பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுனர் சுப்பிரமணி இவரது மனைவி சரஸ்வதி கடந்த ஐந்து வருடங்களுக்கு முன்பு உயிரிழந்ததால், கடந்த ஒரு வருடமாக அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவி கலைவாணி என்பவருடன் சேர்ந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் சுப்பிரமணிக்கும் அவரது கள்ளக்காதலி கலைவாணிக்கும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஆத்திரம் அடைந்த கலைவாணி வீட்டில் இருந்த மிளகாய் பொடியை எடுத்து சுப்பிரமணியின் முகத்தில் வீசி மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் சுப்பிரமணியை தாக்கியதில் சுப்பிரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடித்து உயிரிழந்துள்ளார்.

இதனை அடுத்து கலைவாணி சங்ககிரி காவல் நிலையத்தில் சரண் அடைந்து தான் சுப்ரமணியை கொலை செய்துவிட்டதாக தெரிவித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலமாக கிடந்த சுப்பிரமணியின் சடலத்தை மீட்டு சங்ககிரி அரசு மருத்துவமனைக்கு பிரதேச பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து சங்ககிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story