சட்டவிரோத குட்கா, மது விற்பனை - 21 பேர் மீது வழக்கு

சட்டவிரோத குட்கா, மது விற்பனை - 21 பேர் மீது வழக்கு

எஸ்பி மணிவண்ணன்

வேலூரில் சட்ட விரோதமாக குட்கா, மது பதுக்கி வைத்திருந்த 21 பேர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
வேலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் குட்கா மற்றும் மதுபாட்டில்கள் விற்பவர் மற்றும் கடத்துபவர்களை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். இதன் அடிப்படையில் வேலூர் மாவட்டம் முழுவதும் காவல் ஆய்வாளர்களின் தலைமையிலான போலீசார் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் , 207 மதுபாட்டில்கள், மற்றும் சட்டவிரோதமாக விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த ரூ.730 மதிப்புடைய சுமார் 319 கிராம் குட்கா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சட்ட விரோதமாக குட்கா பதுக்கி வைத்திருந்த 21 நபர் மீது மதுவிலக்கு வழக்குகள் மற்றும் 3 குட்கா வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார்.

Tags

Next Story