சட்டவிரோத மது,குட்கா விற்பனை - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

சட்டவிரோத மது,குட்கா விற்பனை - ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு

செல்வகுமார் 

குன்னம் அருகே துங்கபுரம் கிராமத்தில் சட்டவிரோத மதுவிற்பனை மற்றும் குட்கா விற்பனையை தடுத்து நிறுத்த கோரி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் துங்கபுரம் கிராமத்தைச் சேர்ந்த செல்வகுமார் என்பவர் கிராம மக்கள் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியரை சந்தித்து நேற்று மனு அளித்தார். அதனை தொடர்ந்து அவர் தெரிவிக்கையில், தங்கள் கிராமத்தில் கள்ளத்தனமாக மது விற்பனையும் மற்றும் கிராம பகுதியில் உள்ள கடைகளில் அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை விற்பனையை தடை செய்ய வேண்டும், இதனால் இந்த போதையால் விபத்துக்கள் அதிகமாக நடப்பதாகவும், இளைஞர்கள்வாழ்க்கை சீரழிவு நிலையும் ஏற்பட்டுள்ளது எனவே இது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் தற்போது மீண்டும் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்திருப்பதாகவும் இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளதாக தெரிவித்தனர்.




Tags

Next Story