விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனை: புகார் எண் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோத மதுபான விற்பனை: புகார் எண் அறிவிப்பு
காவல் நிலையம்
விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக மதுபான விற்பனை புகையிலை விற்பனை குறித்து புகார் அளிக்க பிரத்தேக எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டத்தில் சட்ட விரோதமாக கள்ளச்சாராயம் போலி மதுபானங்கள் கஞ்சா மற்றும் புகையிலைப் பொருட்களான குட்கா கூலிப் போன்ற போதைப் பொருட்களின் விற்பனையை தடுப்பதற்காக மாவட்ட காவல்துறை சார்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,

இவற்றை தடுப்பதற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா காவல் துறைக்கும் மதுவிலக்கு அமல்பிரிவுக்கும் சிறப்பு அறிவுரைகளை வழங்கி உள்ள நிலையில் கள்ளச்சாராயம் போலி மதுபானங்கள் கஞ்சா மற்றும் புகையிலை பொருட்களான குட்கா, கூலிப் போன்ற போதைப் பொருட்களின் விற்பனை செய்பவர்கள் பற்றிய நபர்களின் தகவலை அளிக்க விரும்புவோர் 24 மணி நேரமும்

செயல்படும் whatsapp வசதியுடன் கூடிய தொலைபேசி எண்ணான 94 43 96 75 78 மற்றும் 90 42 73 87 39 ஆகிய இரண்டு எண்களுக்கும் புகார் அளிக்கலாம் எனவும் புகார் தெரிவிப்பவர்களின் ரகசியம் பாதுகாக்கப்படும் எனவும்,

புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

Tags

Next Story