சட்டவிரோத மது விற்பனை - ஒருவர் கைது
![சட்டவிரோத மது விற்பனை - ஒருவர் கைது சட்டவிரோத மது விற்பனை - ஒருவர் கைது](https://king24x7.com/h-upload/2024/06/12/545744-750434.webp)
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்
ஆலங்குடி அருகே சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 38 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பகுதியில் தனிப்படை போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஆலங்குடி அருகே வீட்டில் மதுவிற்ற வேங்கிடாகுளம் கீழத்தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி மதி (55) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 38 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1,690 ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
Next Story