அத்துமீறி மது விற்றவர் கைது

ஆர். புதுக்கோட்டையில் சட்டவிரோத மதுபான விற்பனை. ஒருவர் கைது. கரூர் மாவட்டம், மாயனூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட, ஆர். புதுக்கோட்டை பகுதியில் சட்டவிரோதமாக,மது விற்பனை நடப்பதாக சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் ரமேஷுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் டிசம்பர் 20ஆம் தேதி மதியம் ஒரு மணியில் இருந்து இரண்டு மணி வரையிலும் ஆர்.புதுக்கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ஆர். புதுக்கோட்டை, நடுத்தெரு பகுதியைச் சேர்ந்த செந்தில் மகன் ராகுல் வயது 35 என்பவர் சட்ட விரோத மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், ராகுல் விற்பனைக்கு வைத்திருந்த 6- குவாட்டர் மது பாட்டில்களை பறிமுதல் செய்து, அவர் மீது வழக்கு பதிவு செய்த மாயனூர் காவல்துறையினர், பின்னர் அவரை காவல் நிலைய பினையில் விடுவித்து நடவடிக்கை மேற்கொண்டனர்.

Tags

Next Story