சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர் கைது

திண்டுக்கல் அருகே செந்துறையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற ஒருவர் கைது - 115 பாட்டில் பறிமுதல்
திண்டுக்கல் மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் சுந்தர பாண்டியன் தலைமையிலான போலீசார் திண்டுக்கல்லை சுற்றியுள்ள பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 மணி அளவில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது செந்துறை பகுதியில் சட்டவிரோதமாக மதுபானம் விற்ற மூக்கன் வயது 50 என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 115 மதுபான பாட்டில்கள் பறிமுதல் மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து காவல் நிலையத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags

Next Story