சட்டவிரோத மது விற்பனை செய்தவர் கைது

சட்டவிரோத மது விற்பனை செய்தவர் கைது

பைல் படம் 

வந்தவாசி அருகே சட்டவிரோத மது விற்பனை செய்த நபரை போலீசார் கைது செய்து மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் தெள்ளார் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பென்னாட்டகரம் - வீரனாமூர் சாலையில் உள்ள ஒரு ஓட்டலில் சோதனை செய்ததில் மதுபாட்டில்கள் மறைத்து வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதனையடுத்து மது விற்பனை செய்த ரேணு (வயது 43) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story