சட்டவிரோத மதுவிற்பனை – ஒருவர் கைது

சட்டவிரோத மதுவிற்பனை – ஒருவர் கைது

மது விற்றவர் கைது

ஓமலூரில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள மேச்சேரி பிரிவு ரோடு மற்றும் பச்சனம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்வதாக ஓமலூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் தலைமை காவலர் ஐயப்பன் உள்ளிட்ட போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை ஈடுபட்டனர்.

அப்பொழுது மேச்சேரி பிரிவு ரோடு ரயில்வே கேட் அருகே குப்புசாமி என்பவருடைய மகன் ராமகிருஷ்ணன் என்பவர் அரசு மதுபானங்களை சட்டவிரோதமாக அதிக விலைக்கு விற்பனை செய்து வருவதை கண்டறிந்தனர். இதையடுத்து அவரை ஓமலூர் காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினர்.

Tags

Next Story