சட்டவிரோத லாட்டரி விற்பனை

சட்டவிரோத லாட்டரி விற்பனை

சட்டவிரோத லாட்டரி விற்பனை

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை செய்தவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைக்கப்பெற்றமையடுத்து, குமாரபாளையம் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். சின்னப்பநாயக்கன்பாளையம் வாரச்சந்தை மற்றும் அங்காளம்மன் கோவில் பகுதியில், வெள்ளை தாளில் மூன்று எண்களை எழுதி லாட்டரி சீட்டு என்று பொய் சொல்லி விற்று வந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.

விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த ரங்கராஜ், (52), மணி, (57) என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து வெள்ளை தாளில் மூன்று எண்கள் எழுதிய சீட்டுக்கள், தலா ஐந்து எண்ணிக்கை பறிமுதல் செய்தனர். இது குறித்து நடவடிக்கை தொடரும் என போலீசார் கூறியுள்ளனர்.

Tags

Next Story