சட்டவிரோதமாக வெள்ளை திரி வைத்திருந்தவர் கைது

சட்டவிரோதமாக வெள்ளை திரி வைத்திருந்தவர் கைது
காவல் நிலையம் 
விருதுநகர் அருகே ஓ.கோவில்பட்டி பகுதியில் சட்டவிரோதமாக வெள்ளை திரி வைத்திருந்தவரை போலீசார் கைது செய்தனர்.
விருதுநகர் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் கணேசன் இவர் ஆமத்தூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஒ .கோவில்பட்டி பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த அங்கிருந்த கண்ணன் என்பவரை சந்தேகத்தின் அடிப்படையில் இருந்ததாக கூறி அவரை விசாரித்த போது அவரிடம் எந்தவித அரசு உரிமமும் இல்லாமல் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தப்படும் வெள்ளைத் திரியை சட்டவிரோதமாக வைத்திருந்தது தெரியவந்தது. இதை அடுத்து அவரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த 50 குரோஸ் திரியை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags

Next Story