சட்டவிரோத பட்டாசு விற்பனை - ஒருவர் கைது

சட்டவிரோத பட்டாசு விற்பனை - ஒருவர் கைது

பறிமுதல் செய்யப்பட பட்டாசு 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆண்டிப்பட்டி கோட்டை பாலம் அருகே அனுமதி இன்றி,விற்பனை செய்யும் நோக்கோடு பட்டாசு பதுக்கி வைத்திருப்பதாக காவல் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசுக்கு தகவல் கிடைத்தது. இந்த தகவலின் அடிப்படையில் ஆண்டிப்பட்டி கோட்டை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அப்பகுதியில் உள்ள போக்குவரத்து பாலம் அருகே, ஆண்டிப்பட்டி கோட்டை, சொசைட்டி தெருவை சேர்ந்த பிரகாஷ் (35) என்பவர், எவ்வித அனுமதியும் பெறாமல் விற்பனை செய்யும் நோக்கோடு பட்டாசுகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. உடனடியாக அவரை கைது செய்த காவல்துறையினர், அவர் மீது வழக்கு பதிவு செய்து, பின்னர் காவல் நிலைய பிணையில் விடுவித்தனர்.

Tags

Next Story