சட்டவிரோதமாக செம்மண் கடத்தல் - அதிகாரிகள் அதிரடி

சட்டவிரோதமாக செம்மண் கடத்தல் - அதிகாரிகள் அதிரடி
பறிமுதல் செய்த வாகனங்கள் .
செம்மண் கடத்திய வாகனங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்`
குமரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் அனுமதி இன்றி செம்மண் வெட்டி கடத்தப்படுவதாக ஏற்கனவே புகார் உள்ளது. இந்த நிலையில் பளுகல் அருகே உள்ள அம்பேற்றின்காலை பகுதியில் அனுமதி இன்றி செம்மண் கடத்தப்படுவதாக பளுகல் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் போலீசார் அந்த பகுதியில் சென்று சோதனை நடத்தினர். அப்போது போலீசாரை கண்டதும் கடத்தலில் ஈடுபட்டவர்கள் வாகனங்களை அங்கே விட்டு விட்டு, தப்பி ஓடினர். தொடர்ந்து செம்மண் ஏற்றப்பட்டிருந்த டிப்பர் டெம்போ மற்றும் பொக்லைன் இயந்திரத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து, செம்மண் கடத்தலில் ஈடுபட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story