சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது

சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல்: ஒருவர் கைது
சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் பறிமுதல். ஒருவர் கைது...
சிவகாசியில் சட்டவிரோதமாக பதுக்கிய பட்டாசுகள் விற்பனை செய்தவரை போலீசார் கைது செய்தனர்.

சிவகாசியில் சட்டவிரோதமாக லாரி குடோனில் பதுக்கிய ரூ 5 லட்ச மதிப்பலான பட்டாசுகள் பறிமுதல்.ஒருவர் கைது... விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே உள்ள பாறைப்பட்டியில் ரோஸ் என்ற பெயரில் டிரான்ஸ்போர்டை அனுப்பக்குளம் பகுதியை சேர்ந்த ராமசாமி என்பவரது மகன் கணேசன் என்பவர் நடத்தி வருகிறார்.

இதில் எந்த ஒரு அனுமதி இல்லாமல் சட்டவிரோதமாக பலதரப்பட்ட பட்டாசுகள் அடங்கிய 281 பெட்டிகளை சிவகாசி கிழக்கு போலீஸார் கைப்பற்றி கணேசன் என்பவரை கைது செய்தனர். மேலும் கைப்பற்றிய பட்டாசுகளின் மதிப்பு சுமார் ரூ 5,30,000 ஆகும்.

மேலும் காவல்துறை அதிகாரிகள் கூறும் போது தொடர்ச்சியாக சட்டவிரோதமாக பட்டாசு தயார் செய்தல்,பட்டாசுகள் பதுக்கிய நபர்கள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags

Next Story