மது விற்ற 5 பேர் கைது

மது விற்ற 5 பேர் கைது

மது விற்றவர் கைது

கள்ளக்குறிச்சி மாவட்டம்,திருநாவலுாரில் மது விற்பனை செய்த ஐந்து பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

உளுந்துார்பேட்டை அடுத்த திருநாவலுார் அருகே மதுபாட்டில்கள் விற்பதாக போலீசார் தகவல் கிடைத்தது. அதன்பேரில் திருநாவலுார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மது பாட்டில்கள் விற்ற 5 பேரை மடக்கி பிடித்தனர்.

விசாரணையில், அவர்கள், உளுந்துார்பேட்டை தாலுகா, சீக்கம்பட்டு பகுதியைச் சேர்ந்த பன்னீர், 45; வ.பெரியகுப்பம் மணிகண்டன் மனைவி பரமேஸ்வரி, 30; சேந்தமங்கலம் பாஸ்கர், 34; களவனுார் குமார், 46; எம்.குன்னத்துார் அய்யாசாமி விஜி, 37, ஆகியோரை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர்.

Tags

Next Story