சட்டவிரோத புகையிலை விற்பனை - கடை உரிமையாளர் கைது

சட்டவிரோத புகையிலை விற்பனை - கடை உரிமையாளர் கைது
சுரண்டையில் புகையிலை விற்பனை
தென்காசி மாவட்டம் , ஆலங்குளம் அருகே சுரண்டையில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.

சுரண்டை காவல் ஆய்வாளா் சுரேஷ், உதவி ஆய்வாளா் அலெக்ஸ் மேனன், மாவட்ட உணவுப் பாதுகாப்பு அதிகாரி சசிதீபா உள்ளிட்ட அதிகாரிகள் சுரண்டை பகுதியில் உள்ள கடைகளில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது, கீழச்சுரண்டையில் உள்ள செ.சாந்தா(70) என்பவரது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து, இரண்டரை கிலோ புகையிலைப் பொருள்களை கைப்பற்றினா்.

Tags

Next Story