மின்னொளியில் ஜொலித்த குமரி கலெக்டர் அலுவலகம்

மின்னொளியில் ஜொலித்த குமரி கலெக்டர் அலுவலகம்
அலுவலகத்தை பார்வையிட்ட குமரி மாவட்ட கலெக்டர்
மாற்றுத் திறனாளிகள் தினத்தை முன்னிட்டு குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் மின்னொளியில் ஜொலித்தது.

ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தினத்தை சிறப்பாக கொண்டாடும் விதத்தில் கடந்த ஆண்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடங்களிலும் ஊதா நிறத்தில் ஒளியூட்டப்பட்ட மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டது.

அதனைத்தொடர்ந்து இந்த ஆண்டும் கன்னியா குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கட்டிடத்தில் இன்று (01.12.2023 ) முதல் 03.12.2023 வரை ஊதா நிறத்தில் ஒளியூட்டப்பட்ட மின்விளக்கு காட்சிப்படுத்த பட்டுள்ளது. இதை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், இன்று மாலை நேரில் பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ.பாலசுப்பிரமணியம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story