கோவில்களில் குடமுழுக்கு - இந்து முன்னணி வலியுறுத்தல்

கோவில்களில் குடமுழுக்கு - இந்து முன்னணி வலியுறுத்தல்

விவேக்

நாகை மாவட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த கோவில்களில் குடமுழுக்கு நடத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்து முன்னணி வலியுறுத்தி உள்ளது.
நாகை மாவட்டத்தில் பழமை வாய்ந்த பல்வேறு சிறப்புகள் மிகுந்த கோவில்கள் பல உள்ளது.இதில் பல கோவில்கள் பல ஆண்டுகளாக புதுப்பிக்கப்படாமலும் குடமுழுக்கு நடத்தப்படாமல் உள்ளது. தமிழக அரசு மசூதிகளுக்கும்,சர்ச்சுகளுக்கும் கொடுக்கும் முன்னுரிமையை கோயில்களுக்கும் கொடுத்து கோயில்களை புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என இந்து முன்னணி நாகை மாவட்ட செயலாளர் இரா.விவேக் நாகை மாவட்ட நிர்வாகத்தையும்,தமிழக அரசையும் வலியுறுத்தி உள்ளார். மேலும் அனுமதி பெறாமல் இயங்கி வரும் கிறிஸ்துவ சபைகள் மற்றும் பள்ளி வாசல்கள் மீது மாவட்ட நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.

Tags

Next Story