குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்- இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்- இந்திய மாணவர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம் 

குடியுரிமைத் திருத்தச் சட்டம் அமலானதைக் கண்டித்து, இந்திய மாணவர் சங்கம் சார்பில் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசுக் கல்லூரிகளின் முன்பாக கண்டனப் போராட்டம் நடைபெற்றது.

புதுக்கோட்டை அரசு மன்னர் கல்லூரி முன்பாக நடைபெற்ற போராட்டத்துக்கு மாணவர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் இரா. வசந்தகுமார் தலைமை வகித்தார். கிளை தலைவர் தாரணிப்பிரியா, செயலர் தனுஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தின் நோக்கத்தை விளக்கி மாவட்டச் செயலர் சா. ஜனார்த்தனன், நகரச் செயலர் மகாலெட்சுமி ஆகியோர் பேசினர்.

கறம்பக்குடி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட துணைச் செயலர் சா. பிரியங்கா தலைமை வகித்தார்.

அறந்தாங்கி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற போராட்டத்துக்கு சங்க நிர்வாகி வாசு தலைமை வகித்தார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட நிர்வாகிகள் பேசினர்.

Tags

Next Story