அரசு பள்ளி மாணவிகளுக்கான முக்கிய அறிவிப்பு

அரசு பள்ளி மாணவிகளுக்கான முக்கிய அறிவிப்பு

ராணிப்பேட்டை ஆட்சியர் 

மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி திட்டத்தின் கீழ் பயன் பெற மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டமானது அரசு பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்வி சேர்க்கையினை அதிகரிக்கும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது 2024 25 ஆம் கல்வியாண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை தமிழ் வழி கல்வியில் பயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டுள்ளது.

ஆகவே மேற்படிப்பில் சேரும் தகுதியுள்ள அனைத்து மாணவிகளும் இத்திட்டத்தில் பயன் பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் வளர்மதி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story