நாமக்கல் செயற்குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

நாமக்கல் செயற்குழுக் கூட்டத்தில் பல முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது!

திமுக செயற்குழு கூட்டம்

இல்லம் தோறும் ஸ்டாலின் குரல் திண்ணைப் பிரச்சாரத்தில் ஈடுபட வேண்டும் என நாமக்கல் கிழக்கு மாவட்ட செயற்குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழக செயற்குழு கூட்டம் நாமக்கல் கிழக்கு மாவட்ட அலுவலகமான கலைஞா் அறிவாலயம் இனமானப் பேராசிரியா் கூட்டரங்கில் நடைபெற்றது. மாவட்ட அவைத் தலைவர் சி.மணிமாறன் தலைமை தாங்கினார். வனத்துறை அமைச்சர் மருத்துவா் மா.மதிவேந்தன், சட்டமன்ற உறுப்பினா்கள் நாமக்கல் பெ.இராமலிங்கம், சேந்தமங்கலம் கே.பொன்னுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனா். கூட்டத்தில் நாமக்கல் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.இராஜேஸ்குமார் கலந்து கொண்டு கூட்டப் பொருள் குறித்தும், வரும் மார்ச் 1 ஆம் தேதி தமிழ்நாடு முதலமைச்சரும், திமுக தலைவருமான மு-.க ஸ்டாலின் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது குறித்தும், “இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்” என்ற தலைப்பில் தேர்தலுக்கான திண்ணை பிரச்சாரம் குறித்தும் விளக்கம் அளித்து பேசினார். கூட்டத்தில், வரும் மார்ச்-1- ஆம் தேதியன்று கழகத் தலைவரும், தமிழ்நாடு முதல்வருமான மு.க.ஸ்டாலின் அவர்கள் 71-ஆம் அகவையில் அடியெடுத்து வைக்கிறார். ஜம்பது ஆண்டுகளுக்கும் மேலான பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரரான நம் தலைவர், கழகத்தை ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பில் அமர வைத்த பெருமையைப் பெற்றுத் தந்துள்ளார். தந்தை பெரியாரின் சமூகநீதியையும், பேரறிஞர் அண்ணாவின் மாநில சுயாட்சிக் கொள்கையையும், தமிழினத் தலைவர் கலைஞரின் சமூகநலத் திட்டங்களையும் மனதில் தாங்கி திராவிட மாடல் ஆட்சியை நடத்திக் கொண்டு இருக்கிறார். அத்தகைய பெருமைமிகு தலைவரின் பிறந்தநாளை நாம் அனைவரும் சீரிய வகையில் கொண்டாடும் விதமாக திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி சிறப்பாக நடத்துவது என இக்கூட்டத்தின் மூலம் தீர்மானிக்கபடுகிறது. மேலும் மார்ச் 1- ஆம் தேதியன்று நாமக்கல் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர்களில் உள்ள அனைத்து ஊராட்சி, வார்டு, கிளை கழகங்களில் கழக கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், பொதுமக்கள் மற்றும் கழக மூத்த முன்னொடிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடுவது எனவும்,தேர்தல் பரப்புரையாக “இல்லம் தோறும் ஸ்டாலின் குரல்” ஒலிக்கட்டும் ! ஒன்றிய அரசு தமிழ்நாட்டுக்குத் தரவேண்டிய நிதியைக் கூடத் தராமல் வஞ்சிக்கும் சூழலில், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் வழங்கும் “தமிழ்ப்புதல்வன்” திட்டம், குடிசை இல்லா தமிழ்நாட்டை உருவாக்க 8 லட்சம் வீடுகள் கட்டித் தரும் “கலைஞரின் கனவு இல்லம்” திட்டம் வறுமை இல்லாத் தமிழ் நாட்டை உருவாக்குவதற்கான ரூ. 5 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் வழங்கும் “முதலமைச்சரின் தாயுமானவர்” திட்டம் என பல்வேறு தரப்பினரையும் குறித்துச் சிந்தித்து, தமிழ்ச் சமூகத்தின் ஒவ்வொருவரும் பயன்படும் வகையில் நிதிநிலை அறிக்கையில் திட்டங்களை அறிவித்து, திராவிட மாடலை உலகமே பாராட்ட செய்து வரும் தமிழ்நாடு முதலமைச்சரின் சீரிய நிர்வாகத் திறனையும், வழிகாட்டும் பாங்கையும் இக்கூட்டத்தின் மூலம் மனமார வாழ்த்தி நன்றி பாராட்டுவது, திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் ஒன்றிய பா.ஜ.க.அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தினை பிப்ரவரி 26-ஆம் தேதியில் தொடங்கி ஒவ்வொரு நாளும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைளை வழங்கி, ஒவ்வொரு வீட்டில் உள்ளவர்களிடமும் “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்” என்ற பரப்புரை குறித்து சில நிமிடங்களாவது விளக்கி, வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. மற்றும் அதனோடு மறைமுக் கூட்டணியில் இருக்கும் அ.தி.மு.க.வை முழுமையாக வீழ்த்தி, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், கழகத் தலைவர் அவர்களின் குரல் டெல்லியிலும் நிறைவேறுவதை உறுதிசெய்வது, திராவிட மாடல் ஆட்சியை நடத்தி வரும் கழகத் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க ஸ்டாலின் அவா்களின் பிறந்தநாளை நாமக்கல் கிழக்கு மாவட்டம் முழுவதும் எழுச்சியுடன் கொண்டாட வேண்டும். மார்ச் 1-ம் தேதி நாமக்கல் கிழக்கு மாவட்டத்தில் உள்ள உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர்களில் உள்ள அனைத்து ஊராட்சி, வார்டு, கிளை கழகங்களில் கழக கொடி ஏற்றியும், இனிப்புகள் வழங்கியும், பொதுமக்கள் மற்றும் கழக மூத்த முன்னோடிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கி கொண்டாடவேண்டும். மார்ச் 1 ம் தேதி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கமோதிரம் வழங்கப்படும். திராவிட மாடல் அரசின் சாதனைகள் மற்றும் அரசின் நிதிநிலை அறிக்கை விளக்கும் பொதுக்கூட்டங்களை மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தலைமைக் கழக அறிவிப்பின்படி சிறப்பாக நடத்தவேண்டும். திராவிட மாடல் ஆட்சியின் மூன்றாண்டு சாதனைகளையும், தமிழ்நாடு அரசின் 2024-25-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையின் சிறப்பம்சங்களையும் வீடுதோறும் கொண்டு சேர்க்கவும், அதேசமயம் ஒன்றிய பா.ஜ.க.அரசு தமிழ்நாட்டுக்கும், தமிழுக்கும், தமிழர்களுக்கும் செய்து வரும் அநீதிகளைத் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொருவருக்கும் எடுத்துரைக்கும் வகையில், “இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்”என்ற தலைப்பில் திண்ணைப் பிரச்சாரத்தை நேற்று (26ம் தேதி) முதல் தொடங்கி தினமும் மாலை நேரங்களில் பூத் கமிட்டியினர் ஒவ்வொரு வீடாகச் சென்று துண்டறிக்கைளை வழங்கி, இல்லந்தோறும் ஸ்டாலினின் குரல்”என்ற பரப்புரையை மேற்கொள்ளவேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணை செயலாளர்கள் கே.செல்வம், வி.பி.ராணி, தலைமை செயற்குழு உறுப்பினர் மரு.இரா.மாயவன், பொதுக்குழு உறுப்பினர்கள், விமலா சிவக்குமார், சரவணன், கண்ணன், பூவராகவன், குணசேகரன், காளியப்பன், மாநில நிர்வாகிகள் இரா.நக்கீரன், ப.ராணி நகர கழகச் செயலாளர்கள் என்.ஆா்.சங்கர், ராணா ஆனந்த், எஸ்.பூபதி, அ.சிவக்குமார், ஒன்றிய கழகச் செயலாளர்கள் கே.பி. இராமசுவாமி, ஆா்.எம்.துரைசாமி, அ.அசோக்குமார், வி.கே.பழனிவேல், கே.பி.ஜெகநாதன், பி.பாலசுப்ரமணியம், பெ.நவலடி. எம்.பி.கெளதம், ஆர்.ஜெயப்பிரகாஷ், எஸ்.செந்தில்முருகன்,பேரூர் கழகச் செயலாளர்கள் பொன்.நல்லதம்பி, ஆர்.எஸ்.எஸ்.ராஜேஷ், பி.ஜெயக்குமார், என்.செல்வராஜ், என்.தனபால், சி.செல்லவேல், முருகேசன், சுப்பிரமணியன், கே.அன்பழகன், பழனியாண்டி, நகர் மன்ற தலைவர்கள் நாமக்கல் து.கலாநிதி, இலக்கிய அணி தலைவர் பெ.ந.பழனிசாமி, சார்பு அணி நிர்வாகிகள் மற்றும் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட துணை செயலாளர்கள் நலங்கிள்ளி நன்றி கூறினார்.

Tags

Next Story