அடிதடி வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

அடிதடி வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை

பெரம்பலூரில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த அடிதடி அடிதடி வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.


பெரம்பலூரில் கடந்த 2020ம் ஆண்டு நடந்த அடிதடி அடிதடி வழக்கில் குற்றவாளிகளுக்கு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
அடிதடி வழக்கில் குற்றவாளிகளுக்கு 3 பேருக்கு 4 மாதம சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தண்டனை வழங்கிய பெரம்பலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றம்.கடந்த 2020-ம் ஆண்டு பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரை 3 பேர் தாக்கிய வழக்கு சம்பந்தமாக அரும்பாவூர் காவல்நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கானது நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்து வந்த நிலையில் வழக்கின் குற்றவாளியான பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம். அம்பேத்கர் தெரு, பகுதியைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் முருகேசன் 38 கிருஷ்ணமூர்த்தி மகன் கவியரசன் தங்கவேல் மகன் பாண்டு என்கிற பிரபு ஆகிய மூன்று நபர்களுக்கும் வேப்பந்தட்டை குற்றவியல் நீதித்துறை நடுவர் குற்றவாளிகள் மூவருக்கும் தலா நான்கு மாதம் சிறை தண்டனை மற்றும் 2000 ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

Tags

Read MoreRead Less
Next Story