கூடுதல் பேருந்துகள் இயக்க மக்கள் எதிர்பார்ப்பு

கூடுதல் பேருந்துகள்  இயக்க மக்கள் எதிர்பார்ப்பு

பேருந்து நிலையம் 

வள்ளியூர் பணிமனையிலிருந்து களக்காடு-நாங்குநேரி வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகளை இயக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அரசு போக்குவரத்து பணிமனையிலிருந்து களக்காடு-நான்குனேரி இடையே குறைந்த அளவிலேயே நகர பேருந்துகள் இயக்கப்படுகின்றன. திருநெல்வேலிக்கும் குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுவதால் அப்பகுதி மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் பள்ளி,கல்லூரி, வேலைகளுக்கு செல்லக் கூடியவர்கள் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.எனவே இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக பேருந்துகள் இயக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags

Next Story