போலி லாட்டரி விற்ற வழக்கில் மூவர் கைது

போலி லாட்டரி விற்ற வழக்கில்   மூவர்  கைது

லாட்டரி விற்பனை 

குமாரபாளையத்தில் போலி லாட்டரி வழக்கில் மூவர் கைது செய்யப்பட்டனர்.

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் போலி லாட்டரி சீட்டு விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். நேற்று பகல் 12:00 மணியளவில் பகுதியில் ரோந்து சென்ற போது, பெராந்தர்காடு, ஆலாங்காட்டுவலசு, மேட்டுக்கடை ஆகிய பகுதிகளில் வெள்ளை சீட்டுகளில் நெம்பர் எழுதி, போலி லாட்டரி சீட்டுக்கள் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதில் சீனிவாசன், 45, சஞ்சீவ்மூர்த்தி, 34, முத்துசாமி, 67, ஆகிய மூவர் கைது செய்யப்பட்டு, இவர்களிடமிருந்து தலா 5 சீட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இது குறித்து வழக்குப்பதிவு செய்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags

Next Story