கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு கட்டிடம் திறப்பு

கலைஞர் நூற்றாண்டு பல்நோக்கு கட்டிடம் திறப்பு

கட்டிடம் திறப்பு 

அடையாறு அருகே ரூ.20 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பல்நோக்குக் கட்டடத்தை அமைச்சர் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தார்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர்மா.சுப்பிரமணியன் அடையாறு மண்டலம், வார்டு-169க்குட்பட்ட ஜோதியம்மாள் நகரில் சைதாப்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.20 இலட்சம் மதிப்பில் கட்டப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு பல்நோக்குக் கட்டடத்தைப் பயன்பாட்டிற்குத் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தமிழச்சி தங்கபாண்டியன், துணை மேயர் மு. மகேஷ்குமார், மண்டலக் குழுத் தலைவர்கள் துரைராஜ், கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story