கூட்டுறவு சங்கத்தில் ரூ. 53. 34 லட்சம் கையாடல்

கூட்டுறவு சங்கத்தில் ரூ. 53. 34 லட்சம் கையாடல்

தப்பலாம் புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2022ல் பயிர் காப்பீடு வழங்கியதில் ரூ. 53. 34 லட்சம் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. 

தப்பலாம் புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் 2022ல் பயிர் காப்பீடு வழங்கியதில் ரூ. 53. 34 லட்சம் முறைகேடு நடந்திருப்பதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
திருவாரூர் அருகே தப்பலாம் புலியூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது . இந்த கூட்டுறவு சங்கத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கியதில் 53 லட்சத்து 34 ஆயிரம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக கூட்டுறவு முறை விசாரணையில் தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் கூட்டுறவு சங்க செயலாளர் மற்றும் ஊழியர் கைது மேலும் அதிமுகவை சேர்ந்த முன்னாள் சங்க தலைவர் உள்ளிட்ட ஒன்பது பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags

Next Story