தர்மபுரி அங்காடியில்.ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

தர்மபுரி அங்காடியில்.ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை

பட்டுக்கூடு 

தர்மபுரி அங்காடியில்.ரூ.5 லட்சத்து 9 ஆயிரத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை தர்மபுரி, ஜன.3: தர்மபுரியில் பட்டு வளர்ச்சி துறை சார்பில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடுகள் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் பட்டு கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள். இந்த அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து மொத்தம் 1054கிலோ பட்டுக்கூடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. 1கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.543-க்கும், குறைந்தபட்சமாக ரூ.356-க்கும், சராசரியாக ரூ.483.07-க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 9ஆயிரத்து 330 மதிப்பில் பட்டுக்கூடுகள் விற்பனை செய்யப்பட்டது.

Tags

Next Story