களத்தில் இளைஞர் அணி வீடு தோறும் செல்லும் பிரச்சாரம் துவக்கம்

களத்தில் இளைஞர் அணி வீடு தோறும் செல்லும் பிரச்சாரம் துவக்கம்

ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்டுள்ளார் 

எடப்பாடியில் திமுக இளைஞர் அணி கூட்டத்தில் வேட்பாளர் அறிமுகம் நடைபெற்றது.

எடப்பாடியில் திமுக இளைஞர் அணி கூட்டத்தில் சேலம் நாடாளுமன்ற வேட்பாளர் அறிமுக கூட்டம் மற்றும் களத்தில் இளைஞர் அணி வீடு தோறும் செல்லும் பிரச்சாரத்தை மேற்கு மாவட்டச் செயலாளர் செல்வகணபதி தொடங்கி வைத்தார். மாநில கழக இளைஞர் அணி செயலாளரும்,விளையாட்டு இளைஞர் நலன் மற்றும் மேம்பாட்டு துறை அமைச்சரும்மான உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தலின்படி இந்தியா கூட்டணியில் சேலம் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் முன்னாள் அமைச்சரும் சேலம் மேற்கு மாவட்ட கழக செயலாளர்

டி.எம். செல்வகணபதி களத்தில் இளைஞர் அணி என்னும் வீடு தோறும் செல்லும் பிரச்சாரத்தை எடப்பாடி சட்டமன்ற தொகுதியில் தொடங்கி வைத்தார்.. அதற்கு முன்னதாக இளைஞர் அணியினர் மத்தியில் பொதுமக்களிடையே திமுகவின் இரண்டரை ஆண்டு கால சாதனைகளை எடுத்துரைத்து வாக்கு சேகரிப்பது குறித்தும் திமுக தலைவர் ஸ்டாலின் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெற்றிக்காக உழைத்து கொண்டு உள்ளனர் அதில் 25% நாம் உழைத்தால் போதும் நாளை நமதே 40ம் நமதே என அறிவுறுத்தி பேசினார். நிகழ்வில் மாநில இளைஞரணி துணை செயலாளர் சீனிவாசன் முன்னிலையிலும் உதயநிதி

ஸ்டாலின் நற்பணி மன்ற மாநில பொருளாளர் ராஜா தமிழ்மாறன் மேற்பார்வையிலும் இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், எடப்பாடி சட்டமன்ற தொகுதி மேற்பார்வையாளர் பரணி மணி மாவட்ட அவை தலைவர் தங்கமுத்து,மாவட்ட கழக துணை செயலாளர் சம்பத்குமார், எடப்பாடி நகர கழக செயலாளர் டி.எஸ்.எம் பாஷா,மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் மகேந்திரன் ,மோகன், பிரபு மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story