மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம் !

மாற்றுக்கட்சியினர் தி.மு.க.,வில் ஐக்கியம் !

 தி.மு.க

கள்ளக்குறிச்சியில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க., வில் இணைந்தனர்.
கள்ளக்குறிச்சியில் மாற்றுக்கட்சியை சேர்ந்தவர்கள் தி.மு.க., வில் இணைந்தனர். கள்ளக்குறிச்சியில் மாற்றுக்கட்சியினர் தி.மு.க., வில் இணையும் நிகழ்வு நடந்தது. ரிஷிவந்தியம் ஒன்றியம் பழையசிறுவங்கூர், பள்ளிப்பட்டு, காந்திநகர் மற்றும் அவிரியூர் ஆகிய கிராமங்களில் உள்ள அ.தி.மு.க., - பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் 500 பேர் அக்கட்சிகளில் இருந்து விலகி, கள்ளக்குறிச்சி தெற்கு மாவட்ட செயலாளர் வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., முன்னிலையில் தி.மு.க., வில் இணைந்தனர். அவர்களை சால்வை அணிவித்து வரவேற்றதுடன், தேர்தல் பணிகளை மும்முரமாக மேற்கொள்ளுமாறு வசந்தம் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., அறிவுறுத்தினார். நிகழ்ச்சியில், தி.மு.க., ஒன்றிய செயலாளர் பெருமாள், ஒன்றிய சேர்மன் வடிவுக்கரசி சாமிசுப்ரமணியன், மாவட்ட கவுன்சிலர் கோவிந்தராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராஜி, நிர்வாகிகள் பெத்து, பாலகிருஷ்ணன், கந்தசாமி, சரவணன், சேட்டு, கோதண்டம், ஊராட்சி தலைவர் ரத்தினம், முன்னாள் ஊராட்சி தலைவர் சக்திவேல் உட்பட பலர் உடனிருந்தனர்.

Tags

Next Story