கன்னியாகுமரியில் மது போதையில் கிடந்த முதியவரிடம் 3 பவுன் நகை பறிப்பு !!

கன்னியாகுமரியில் மது போதையில் கிடந்த முதியவரிடம் 3 பவுன் நகை பறிப்பு !!
கைதான வாலிபர்கள்
கன்னியாகுமரியில் மது போதையில் கிடந்த முதியவரிடம் 3 பவுன் நகை பறித்த இரண்டு வாலிபர் கைது.
குமரி மாவட்டம் கருங்கல் அருகே மத்திகோடு பகுதியை சேர்ந்தவர் நேசையன் (72). இவர் அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். சம்பவ தினம் இவர் திக்கணம்கோடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு வெளியே வந்த போது போதை அதிகமானதால் கீழே விழுந்தார்.அப்போது அங்கு வந்த இரண்டு வாலிபர்கள் நேசையனை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் குளச்சல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி, அந்த வாலிபர்களும் கூட சென்று, சிகிச்சை முடிந்த பிறகு அந்த வாலிபர்கள் நேசய்யனை வீட்டில் கொண்டு விட்டனர். அப்போது நேசய்யன் கழுத்தில் கிடந்த மூன்று பவுன் செயின் மாயமாகி இருந்தது. இது குறித்து அவர் கருங்கல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் நடந்த பகுதியில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, நேசய்யனை மோட்டார் சைக்கிள் அழைத்து வந்தது திக்கணங்கோடு பகுதியை சேர்ந்த ஜெனிஷ் (27) அஜய் (24) என்று தெரிய வந்தது.போலீசார் அவர்கள் இரண்டு பேரையும் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து மதுபோதையில் இருந்த நேசைய்யன் நகையை பதித்ததை ஒப்புக்கொண்டனர். அதை தொடர்ந்து மூன்று பவுன் நகையை மீட்டு, இரண்டு பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story