பொது  இடத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது

குமாரபாளையத்தில் பொது  இடத்தில் துப்பாக்கி காட்டி மிரட்டியவர் கைது செய்யப்பட்டார்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே பூலக்காடு பகுதியில் வசிப்பவர் பிரதாப்குமார், 41. தனியார் நிறுவன பணியாளர். இவர் நேற்று இரவு 09:30 மணியளவில் அதே பகுதியில் உள்ள சக்தி மாரியம்மன் கோவில் அருகே நின்று கொண்டு, துப்பாக்கியை வைத்துக்கொண்டு யாருடா, என் மகளை அடித்தது? என கேட்டு மிரட்டிக்கொண்டு இருந்தார். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த ஓட்டுனர் பூபதி, 30, என்பவர் என்ன விபரம் என கேட்க, பிரதாப்குமார், இவரை தகாத வார்த்தையால் திட்டி துப்பாக்கியால் சுட்டு விடுவதாக மிரட்டியுள்ளார். இது குறித்து பூபதி குமாரபாளையம் போலீசில் புகார் செய்ய குமாரபாளையம் போலீசார் பிரதாப்குமாரை கைது செய்தனர்.

Tags

Next Story