குமாரபாளையத்தில் பழக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்: அவதியுறும் நோயாளிகள்

குமாரபாளையத்தில் பழக்கடைகளில் குவிந்த பொதுமக்கள்: அவதியுறும் நோயாளிகள்

பழக் கடையில் குவிந்த மக்கள்

குமாரபாளையம் பழக்கடைகளில் பொதுமக்கள் குவிந்த நிலையில், அரசியல் கட்சியினர் பிரச்சாரத்தால் நோயாளிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் சித்திரை முதல் நாள் கொண்டாட, வீடுகளில் சுவாமி படங்கள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, கனி வகைகள் படையலிட்டு பொதுமக்கள் வணங்கி வருவது வழக்கம். இதற்காக பூக்கடைகள், பழக்கடைகள் ஆகியவற்றில் பொதுமக்கள் குவிந்தனர்.

இடைப்பாடி சாலை தினசரி காய்கறி மார்க்கெட் பகுதியில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் வாகனங்கள் செல்ல முடியாத அளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் பொதுமக்கள் சின்னப்பநாயக்கன்பாளையம், காவேரி நகர், செல்ல முடியாத நிலையும், தேவூர், இடைப்பாடி செல்லும் பஸ்கள் போக முடியாத நிலையும் ஏற்பட்டது.

இதன் அருகில் அரசு மருத்துவமனை இருப்பதால், அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட போக முடியாத நிலை ஏற்பட்டது. இது தவிர இந்த கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல்வேறு அரசியல் கட்சியினர் அரசு மருத்துவமனையின் முன்பு வாகனத்தை நிறுத்தி, ஒலிபெருக்கி அளவை அதிகப்படுத்தி பிரச்சாரம் செய்தனர்.

இதனால் அவசர சிகிச்சைக்கு வந்த நோயாளிகள் தனக்கு என்ன நேர்ந்தது என்பதை டாக்டர் வசம் சொல்ல முடியாமலும், டாக்டர் சொல்வது நோயாளிக்கு புரிந்து கொள்ள முடியாத நிலையும் ஏற்பட்டது. உள் நோயாளிகளாக இருப்பவர்கள், பிரசவ வழியில் அட்மிட் ஆனவர்கள், குழந்தை பிறந்து சிகிச்சை பெற்று வருபவர்கள், பிறந்த குழந்தைகள் உள்பட அனைவரும்,

ஒலிபெருக்கியின் சத்தத்தால் பெறும் அவதிக்கு ஆளாகினர். இன்னும் நான்கு நாட்கள் மட்டுமே இருப்பதால், அரசியல்வாதிகள் தங்கள் பிரசாரத்தை மேலும் தீவிரப்படுத்துவார்கள். அரசு மருத்துவமனை பகுதியில், மற்றும் இதர தனியார் மருத்துவமனை பகுதிகள் ஆகிய இடங்களில் பிரச்சாரம் செய்ய க்கட்டுப்பாட்டினை மாவட்ட நிர்வாகம் அவசியம் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story