புதுக்கோட்டையில் தீவிர வாக்கு சேகரிப்பில் பா.ஜ.,வினர்

புதுக்கோட்டையில் பா.ஜ.,வினர் வாக்கு சேகரிக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா முழுவதும் வருகின்ற சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது இதற்காக பாரதிய ஜனதா கட்சியினர் வாக்கு சேகரிக்கும் அமைப்பில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர் இந்நிலையில் புதுக்கோட்டை போஸ் நகரில் பூத்கமிட்டிகளை வலுப்படுத்துவதற்காக பாஜக மாநில செயற்குழு உறுப்பினரும் திருச்சி பாராளுமன்ற தொகுதி இணை அமைப்பாளருமான டாக்டர் ஆர்.ஜி ஆனந்த் புதுக்கோட்டைநகரில் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது அவரது தலைமையில், புதுக்கோட்டை போஸ் நகர் பகுதியை சேரந்த நூற்றுக்கும் மேற்பட்ட முதல்முறை வாக்காளர்கள் தாமரை சின்னத்தை கையில் பச்சை குத்திக்கொண்டு பாரதிய ஜனதா கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர்.

தாரை தப்பட்டை முழங்க ஊர்வலமாக வந்து நேதாஜி சிலைக்கு டாக்டர் ஆர்ஜி ஆனந்த் மாலை அணிவித்தார். பாஜக வரலாற்றில் பச்சை குத்தி தங்கள் கட்சி விசுவாத்தை இளைஞர்கள் வெளிப்படுத்தியது இதுவே முதல் முறை ஆகும். இந்நிலையில் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பாஜக பொது செயலாளர் ஏ.வி.சி.சி கணேசன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்

Tags

Next Story