சுந்தரபாண்டியபுரத்தில் ரூ. 75 லட்சத்தில் தார் சாலை பணி

சுந்தரபாண்டியபுரத்தில் ரூ. 75 லட்சத்தில் தார் சாலை பணி
சுந்தரபாண்டியபுரத்தில் ரூ. 75 லட்சத்தில் தார் சாலை பணி நடைபெற்றது
சுந்தரபாண்டியபுரத்தில் ரூ. 75 லட்சத்தில் தார் சாலை பணி நடைபெற்றது

தென்காசி மாவட்டம், தென்காசி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுந்தரபாண்டியபுரம் பேரூராட்சி பகுதியில், நபார்டு திட்டம் 2023-24ல் அனுமன் நதி பாலம் முதல் சாம்பவர்வடகரை மெயின்ரோடு வரை ரூ. 75 லட்சத்தில் தார் சாலை அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணி தொடக்க விழா நேற்று நடைபெற்றது.

விழாவிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் காளியம்மாள் செல்வ குமார் தலைமை வகித்தார். பேரூராட்சி மன்ற துணைத்தலைவரும், பேரூர் திமுக செயலாளருமான பண்டாரம் முன்னிலை வகித்தார். முன்னாள் தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பணியினை தொடங்கி வைத்து பேசினார்.

முன்னதாக சுந்தரபாண்டியபுரம் வருகை தந்த அவருக்கு, ஒன்றிய இளைஞரணி செல்வகுமார் தலைமையில் கட்சி நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அங்குள்ள பேரறிஞர் அண்ணா, முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சிவபத்மநாதன், கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்நிகழ்ச்சிகளில், தென்காசி தெற்கு மாவட்ட திமுக துணை செயலாள ரும், மாவட்ட கவுன்சிலரு மான கனிமொழி, ஆய்க்குடி பேரூராட்சி மன்ற தலைவர் சுந்தர்ராஜன், ஆலங்குளம் பேரூராட்சி மன்ற தலைவர் சுதா மோகன்லால், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் மாரிமுத்து பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story