தஞ்சையில் கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

தஞ்சையில் கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை 

மரியாதை செய்த வைரமுத்து

தஞ்சையில் தமுஎகச சார்பில், கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தார்.

கவிஞர் தமிழ்ஒளி 60ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு, வெள்ளிக்கிழமையன்று, தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தில், தமிழக அரசால் நிறுவப்பட்டுள்ள கவிஞர் தமிழ்ஒளி சிலைக்கு, தஞ்சை தமுஎகச தோழர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்நிகழ்வில், தமிழ்ஒளி நூற்றாண்டுக்குழு பொருளாளரும், கல்வியாளருமான தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். நிகழ்ச்சியின் நிறைவில், பல்கலைக்கழக மொழிப்புல அரங்கில், அங்கு கூடியிருந்த தோழர்களும், பல்கலைக்கழக பேராசிரியர்களும், ஆய்வு மாணவர்களும் இணைந்து சிறிய கூட்டம் ஒன்றை ஏற்பாடு செய்தனர்.

அந்நிகழ்வில் தோழர் பிரின்ஸ் கஜேந்திரபாபு, பேராசிரியர்கள் பிரபாகரன், இளையாபிள்ளை, சீமோன் இளையராஜா, தமுஎகச துணைப் பொதுச்செயலாளர் களப்பிரன், கவிஞர் வல்லம் தாஜ்பால் ஆகியோர் உரையாற்றினர்.

தமுஎகச மாவட்டச் செயலாளர் இரா.விஜயகுமார், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், த.சுத்தானந்தன், ப.சத்தியநாதன், மு.ஆனந்தன், வி.திருநாவுக்கரசு, ச.கோதண்டபாணி உள்ளிட்ட தஞ்சை தமுஎகச தோழர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

Tags

Next Story