கர்ப்பிணி தற்கொலை வழக்கில் திருப்பம் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை!

கர்ப்பிணி தற்கொலை வழக்கில் திருப்பம் உடல் தோண்டி எடுத்து பரிசோதனை!

கர்ப்பிணி தற்கொலை

கர்ப்பிணி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக கொண்ட வழக்கில் திருப்பம் ஏற்பட்டதையடுத்து மருத்துவ குழுவினர் உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர்.
இலுப்பூர் அன்னவாசல் அருகே உள்ள ஊரப்பட்டியைச் சேர்ந்தவர் அலெக்ஸாண்டர் இவரது மனைவி விஜயநிலா வயது 33 இவர்களுக்கு நான்கு மகள்கள் உள்ள நிலையில் விஜயநிலா மீண்டும் கர்ப்பமானார். கடந்த எட்டாம் தேதி அலெக்ஸாண்டர் மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்தார். அப்போது கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த விஜயநிலா அன்று இரவு தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதையடுத்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்காமல் உடலை உருவினர்கள் அடக்கம் செய்தனர். இதை யடுத்து இதை அறிந்த விளத்துப்பட்டி விஏஓ அன்னவாசல் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் போலீசார் விசாரணை நடத்தினர் நேற்று மாலை இலுப்பூர் தாசில்தார் சூரிய பிரபு முன்னிலையில் மருத்துவ குழுவினர் விஜயநிலா உடலை தோண்டி எடுத்து அங்கேயே பிரேத பரிசோதனை செய்தனர். பின்னர் உடல் மீண்டும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டு அடக்கம் செய்யப்பட்டது.

Tags

Next Story