கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பெண் திடீர் தர்ணா

கலெக்டர் அலுவலகத்தில்  தரையில் அமர்ந்து பெண் திடீர் தர்ணா

தர்ணா போராட்டம்

கலெக்டர் அலுவலகத்தில் தரையில் அமர்ந்து பெண் திடீர் தர்ணாவில் ஈடுபட்டார்.

திருவண்ணாமலை:- போளூர் தாலுகா கல்வாசல் அண்டம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி விஜயகுமாரி. இவர் நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு கோரிக்கை மனு அளிக்க வந்தார்.

அப்போது அவர் திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் தரையில் அமர்ந்து கண்ணீர் விட்டு அழுதபடி தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டார். உடனடியாக அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார். அவரை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது அவர் கூறுகையில், எங்கள் பட்டா இடத்தில் சிலர் ஆக்கிரமிப்பு செய்து பாதை அமைத்து உள்ளனர். நாங்கள் வைத்த நெற்பயிரில் அறுவடை எந்திரம் வைத்து பெருமளவில் அழித்து விட்டனர்.

எனவே இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார். பின்னர் கலெக்டர் முருகேஷிடம் கோரிக்கை மனு அளித்தார். மனுவை பெற்று கொண்ட கலெக்டர், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து 'விஜயகுமாரி அங்கிருந்து சென்றார். இதனால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story