திருப்பத்தூரில் ஜாதி சான்றிதழ் கேட்டு பழங்குடி மக்கள் நூதன போராட்டம்

திருப்பத்தூரில் ஜாதி சான்றிதழ் கேட்டு  பழங்குடி மக்கள் நூதன போராட்டம்

முன்னாள் எம்.எல்.ஏ டில்லி பாபு பேட்டி 

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு குருமன்ஸ் பழங்குடி மக்கள் சங்கம் சார்பில் குருமன்ஸ் பழங்குடி இன மக்களுக்கு இனச் சான்றிதழ் வழங்க கோரி தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க தலைவரும் அருர் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்எல்ஏவும்மான டில்லி பாபு தலைமையில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்கள் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தாங்கள் குருமன்ஸ் இன பழங்குடி மக்கள் தான் என்பதற்கு சான்றாக சேவையாட்டம் ஆடியும், அருள் கொண்டவர் மீது தேங்காய் உடைத்து சாமியை வழிபடும் நிகழ்வையும் நிகழ்த்தி காட்டினார். மேலும் 2014 முதல் 2016 வரை திருப்பத்தூர் மாவட்டத்தில் வழங்கிய குறுமன்ஸ் பழங்குடி இனச் சான்றிதழ்களை ரத்து செய்ய சட்ட விரோத முறையில் வலியுறுத்திய தமிழ்நாடு அரசின் பழங்குடியினர் நலத்துறை செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பின்படி பெற்றோருக்கு இனச்சான்றிதழ் இருந்தால் பிள்ளைகளுக்கும் வழங்க வேண்டும். மேலும் குருமன்ஸ் கலாச்சாரத்தை அடிப்படையாகக் கொண்ட குருமன்ஸ் இன மக்களுக்கு பழங்குடி இனச் சான்றிதழ் வழங்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பழங்குடி மக்கள் சங்கம் தலைவர் சிவலிங்கம் பொதுச்செயலாளர் வீரபத்திரன், பொருளாளர் அரங்கநாதன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க செயலாளர் சாமிநாதன் துவக்கவுரையாற்றினார்.‌ தாலுகா செயலாளர் காசி மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்.

Tags

Next Story