திருப்பூரில் பாஜகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதம்

திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே பாஜகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூரில் பாஜகவினர் முற்றுகையிட்டு வாக்குவாதம். அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெறுகின்ற நிலையில் திருப்பூர் அரிசி கடை வீதியில் உள்ள ஸ்ரீ விஸ்வேஸ்வரர் கோவிலில் led திரை வைக்க பாஜக முயற்சித்த போது காவல்துறையினர் மற்றும் அறநிலையத்துறை அலுவலர்கள் அதனை தடுத்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவின் மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமையில் கட்சியினர் செயல் அலுவலரை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story