கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது : சரக்கு வாகனம் பறிமுதல்!

கட்டுமான பொருட்களை திருடிய வாலிபர் கைது : சரக்கு வாகனம் பறிமுதல்!

பைல் படம்

தூத்துக்குடியில் இரும்பு கம்பி உள்ளிட்ட கட்டுமான பொருட்களை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி சிலுவைப்பட்டி இந்திரா நகரைச் சேர்ந்தவர் அருணாச்சலம் மகன் வீரமணி (31) பில்டிங் காண்ட்ராக்டர். இவர் மாப்பிள்ளையூரணி தியாகராஜா நகரில் புதிதாக வீடு கட்டும் பணி ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கட்டுமான பணிகளுக்காக வைத்திருந்த இரும்பு கம்பிகள், பலகைளை மர்ம நபர்கள் திருடிச் சென்று விட்டார்களாம்.

இதன் மதிப்பு சுமார் ரூ.50ஆயிரம் ஆகும். இதுகுறித்து தாளமுத்து நகர் காவல் நிலையத்தில் வீரமணி புகார் செய்தார். புகாரின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முனியசாமி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில், தூத்துக்குடி ஜோதிபாஸ் நகரை சேர்ந்த ராமலிங்கம் மகன் அருண்குமார் (22) என்பவர் திருடியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார அவரை கைது செய்து இரும்பு கம்பிகள், பலகை, மற்றும் திருடுவதற்கு பயன்படுத்திய வேன் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story