விழுப்புரத்தில் காவலர்கள் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

விழுப்புரத்தில் காவலர்கள் பிள்ளைகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சி

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற காவலர்களின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

விழுப்புரம் மாவட்ட காவல்துறை சார்பில் கடந்த 2022-2023-ம் கல் வியாண்டில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற போலீசார், காவல் கண்காணிப்பாளர் அலுவலக அமைச்சுப்பணியாளர்களின் பிள்ளைகளுக்கு உயர்கல்வி படிக்க கல்வி ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச் கலந்துகொண்டு மதிப்பெண் வரிசையில் மாவட்டத்தில் முதல் 10 இடங்களை பெற்ற மாணவ-மாணவிகளுக்கு உயர் கல்வி படிக்க ஊக்கத்தொகையை வழங்கி பாராட்டினார். அப்போது தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதன் உடனிருந்தார்.

Tags

Next Story