பாஜக சார்பில் கிராமம்தோறும் செல்வோம் நிகழ்ச்சி துவக்க விழா

பாஜக சார்பில் கிராமம்தோறும் செல்வோம் நிகழ்ச்சி துவக்க விழா


விழுப்புரத்தில் பாஜக சார்பில் கிராமம்தோறும் செல்வோம் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.


விழுப்புரத்தில் பாஜக சார்பில் கிராமம்தோறும் செல்வோம் நிகழ்ச்சி துவக்க விழா நடந்தது.

பா.ஜனதா சார்பில் கிராமம்தோறும் செல்வோம் நிகழ்ச்சி நடை பெற்று வருகிறது. இதன் மூலம் மத்திய அரசின் நலத்திட்டங்கள் குறித்து விளக்கி கூறி மீண்டும் மோடி, வேண்டும் மோடி என்ற தலைப்பில் பொதுமக்களிடம் கலந்துரையாடல் நடைபெற்று வரு கிறது. அந்த வகையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட பா.ஜனதா சார்பில் வடக்கு மாவட்ட தலைவர் ஏ.டி.ராஜேந்திரன் தலைமையில் திண்டிவனம் அடுத்த ஓமந்தூர் கிராமத்தில் கிராமம்தோறும் செல் வோம் என்கிற நிகழ்ச்சியின் தொடக்க விழா நடைபெற்றது,

இதில் நாடாளுமன்ற தேர்தல் மாநில இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி கலந்து கொண்டு கிராமம்தோறும் செல்லும் நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். முன்னதாக ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் மணிமண்டபத்திற்கு சென்று ராமசாமி ரெட்டியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் இணைந்து தேர்தலை சந்திக்க அனைத்து தரப்பு கட்சிகளையும் கூட்டணிக்கு அழைக்கிறோம். ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவருக்கும் அவர்களது கருத்தை வெளிப்படுத்த உரிமையுண்டு. அதுபோல் நீங்கள் குறிப்பிட்ட கட்சியும் அவர்களுடைய முடிவை தெரிவிப்பதற்கு உரிமை உள்ளது என்றார். நிகழ்ச்சியில் திறன் மற்றும் மேம்பாட்டு பிரிவு மாநில செயலாளர் ஹரிகிருஷ்ணன், மற்றும் நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

Tags

Next Story