அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா !

அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா !
அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா
அங்கன்வாடி மைய கட்டிட திறப்பு விழா நடைபெற்றது. எம்பி எம்எல்ஏ பங்கேற்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம்,அச்சரப்பாக்கம் பேரூராட்சியில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் ஜி. செல்வம் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 11. 10. லட்சம் மதிப்பீடு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்காக அதன் திறப்பு விழா நிகழ்ச்சி வார்டு கவுன்சிலர் தாவுத்பிஉசேன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக காஞ்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் க. சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம் பி ஜி. செல்வம், பேரூர் செயலாளர் எழிலரசன், பேரூராட்சி தலைவர் நந்தினி ஆகியோர் கலந்து கொண்டு புதிய கட்டிடத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்து இனிப்புகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் கண்ணன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் உசேன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story