வட்டாட்சியர் அலுவலக கட்டிட திறப்பு விழா

வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடத்தை முதல்வர் ஸ்டாலின் நேற்று காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்தார்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில், நந்திவரம்- கூடுவாஞ்சேரி நகராட்சியில்,3 கோடியே 7 இலட்ச மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்ட வண்டலூர் வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடத்தினை,தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை காணொளி காட்சியின் வாயிலாக திறந்து வைத்ததை தொடர்ந்து, தொகுதி மக்கள் சார்பில் முதல்வருக்கு நன்றி தெரிவித்து, புதிய வட்டாச்சியர் அலுவலகத்தை செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் குத்துவிளக்கேற்றி பொதுமக்களின் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார்.

உடன் காட்டாங்குளத்தூர் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் உதயா கருணாகரன்,நந்திவரம்- கூடவாஞ்சேரி நகர மன்ற தலைவர் எம். கே .டி .கார்த்திக் தண்டபாணி,துணைத் தலைவர் ஜி. லோகநாதன்,உயர் அதிகாரிகள், வட்டாட்சியர், வார்டு உறுப்பினர்கள்,திமுக நிர்வாகிகள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



Tags

Next Story