திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையத்தில் மின் மயானம் திறப்பு விழா!

திருப்பூர் மாநகராட்சி இடுவம்பாளையத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மின் மயானத்தை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் திறந்து வைத்தார்.

திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டலத்திற்கு உட்பட்ட இடுவம்பாளையத்தில் ரூ. 1 கோடியே 50 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட மின் மயானத்தை மாநகராட்சி மேயர் தினேஷ்குமார் மற்றும் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகராட்சி நான்காவது மண்டல தலைவர் இல. பத்மநாபன் கூறியதாவது முருகம்பாளையம் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மின்யானம் கட்டி முடிக்கப்பட்டு இன்று திறக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.மேலும் பொது மக்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து மேயர் மற்றும் மாநகராட்சி ஆணையரிடம் தெரிவித்துள்ளதால் விரைவில் அதையும் முடித்து தருவதாக கூறியுள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி துணை ஆணையாளர் வினோத், மாநகரப் பொறியாளர் செல்வநாயகம், திருப்பூர் மாநகராட்சி சுகாதார குழு தலைவர், 57 வது வார்டு மாமன்ற உறுப்பினர் கவிதா,இல.மோகன்,57 வது வார்டு செயலாளர் நேதாஜி கண்ணன், குட்வின் செல்வம் மற்றும் திமுக கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story