திருக்கோவிலுார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா !

திருக்கோவிலுார் கல்லுாரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா !

திருக்கோவிலுார் கல்லுாரி

திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடந்தது.
திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வகுப்பு துவக்க விழா நடந்தது. கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். கல்லுாரி தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கி சிறப்புரையாற்றினார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, துணைத்தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனிராஜ், சத்திய நாராயணன் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினர்.சிறப்பு விருந்தினர் முதுகலை தமிழாசிரியர் வேலாயுதம், கல்வியின் அவசியம் குறித்து பேசினார். நிர்வாக அலுவலர் குமார் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தார். பேராசிரியர் சந்திரசேகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்லுாரி மாணவர்கள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர். துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.

Tags

Next Story