ஈஞ்சம்பாக்கம் பகுதியில் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி திறப்பு விழா

சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் துணை மின் நிலையத்தில் மின்மாற்றி திறப்பு விழா நடந்தது.

தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொளி மூலம்,சோழிங்கநல்லூர் தொகுதிக்குட்பட்ட ஈஞ்சம்பாக்கம் பகுதியில் 33/11 கி.வோ. துணை மின் நிலையத்தில் ரூ.2,28,00,000 (2.28 கோடி) மதிப்பீட்டில்‌ அமைக்கப்பட்டுள்ள 16 எம்.வி.ஏ மின் மாற்றியை, காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்த நிகழ்வில், தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன், சோழிங்கநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் அரவிந்த் ரமேஷ் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில், சோழிங்கநல்லூர் கிழக்கு பகுதி கழக செயலாளரும், / 15-வது மண்டலக் குழுத் தலைவர் V.E.மதியழகன், மாமன்ற உறுப்பினர் விமலா கர்ணா,வட்ட செயலாளர் கர்ணா மற்றும் சோழிங்கநல்லூர் கோட்ட செயற் பொறியாளர் பால சுப்பிரமணியன், இந்திர நகர் உதவி செயற் பொறியாளர் V.வாசு தேவன், உள்ளிட்ட உதவி பொறியாளர்,திமுக நிர்வாகிகள் அனைவரு‌ம் கலந்து கொண்டனர்.

Tags

Next Story