செய்யாறு அருகே ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு

செய்யாறு அருகே ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் புதிய பள்ளி கட்டடம் திறப்பு

பள்ளி கட்டிடம் திறப்பு 

திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஒன்றிய கடந்தல் கிராமத்தில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தில் ரூபாய் 28 லட்சம் மதிப்பீட்டில் கட்டப் பட்டுள்ள புதிய ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கட்டடத்தை எம்எல்ஏ ஒ.ஜோதி திறந்து வைத்துபேசினார்.

நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை தாங்கினார். ஒன்றிய குழு தலைவர் ராஜி முன்னிலை வகித்தார். மத்திய ஒன்றிய கழக செயலாளர் சீனிவாசன் வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் தினகரன், சங்கர் உள்ளிட்ட திமுக நிர்வாகிகள், கிராம பொதுமக்கள், பள்ளி மாணவர்கள், ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story